Revolution 2020 - விமர்சனம்



 

ஆங்கில அண்ணல், வருங்கால இந்தியாவை வடிவமைக்கும் சிந்தனைச்சிற்பி, “IIT” புகழ் சேதன் பகத்’தார் எழுதி பெரும் எதிர்பார்ப்பிற்க்கிடையே வெளிவந்திருக்கும் நாவல் “Revolution2020”.


தன் தந்தையின் ஆசைப்படி IIT, JEE தேர்வுகளில் வென்று, இஞ்சினியராக ஆசைப்பட்டு அதில் தோற்று, சிறுவயது முதலே மனதில் வைத்து வளர்த்த காதலும் கைகூடாமல் தோல்வியின் பிரதிபலிப்பாக முதலாமவன் கோபால். “வேண்டுவதெல்லாம் பணம், பணத்தைத் தவிர வேறொன்றுமில்லை” என்னும் கொள்கைப்படி வாழ நினைப்பவன். மாறாக, இத்தேர்வுகளில் வென்று இன்ஜினியரிங் படித்தும் இந்தியாவைத் திருத்துகிறேன், புரட்சி பண்ணுகிறேன் என்று ஒரிஜினல் பகத்தின் நகலாக இரண்டாமவன் ராகவ். இவ்விருவரின் ஆசை நாயகி ஆர்த்தி. ராகவ்’வையும் கைவிட முடியாமல், கோபாலுக்கும் கம்பெனி கொடுக்கும் அழகுப்பதுமை (என வர்ணிக்கிறார் பகத்). இவர்கள் மூவருக்குமிடையேயான புரட்சியோடு கூடிய முக்கோண காதல் போராட்டம் தான் கதை.


IIT தேர்வுகளில் தோற்று, தன் தந்தையின் விருப்பத்திற்கிணங்க வெளியூருக்கு கோச்சிங் செல்கிறார் கோபால். அந்த சமயத்தில் தன் ஆசை நாயகி ஆர்த்தி ராகவ்’வுடன் கமிட்’டாகி விட, இதற்கெல்லாம் ராகவ்’வின் IIT ரேங்க் தான் காரணமென்று மனதிற்குள் வஞ்சம் வளர்க்கிறார். “ராகவ், இந்த நாளை உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ. ஒருநாள் இல்ல ஒருநாள்....” என மனதிற்குள் சபதம் எடுக்கிறார். இருந்தும் இரண்டாம் முறையும் தேர்வில் தோற்கிறார். அந்த அதிர்ச்சியில் தந்தை இறந்துவிட, அனாதையாகும் கோபாலுக்கு ஆதரவளிக்கிறார் அந்த ஊர் எம்.எல்.ஏ சுக்லா. தந்தை விட்டுச்சென்ற முப்பது ஏக்கர் நிலத்தில் எம்.எல்.ஏ’வின் உதவியோடு இன்ஜினியரிங் கல்லூரி கட்டுகிறார். இன்ஜினியரிங் படிக்கக் கூட வக்கில்லாத கோபாலை இன்ஜினியரிங் கல்லூரி ஓனராக்கும் அந்த கணத்தில், ஒரே பாடலில்  சின்ராசுவை முதலாளியாக்கும் “சூரியவம்சம்” விக்ரமன் கூட தோற்று விடுகிறார் பகத்திடம். 


மறுபக்கம், பெற்றோர் விருப்பத்தை மீறி, பொறியியலில் ஆர்வம் காட்டாமல், ஜர்னலிசம் படித்து பத்திரிகைத் துறையில் கால்பதிக்கிறார் ராகவ். IIT யில் படித்தும், உலகை சீர்திருத்த பேனா பிடிக்கும் அந்த நொடியில், ராகவை மீறி சேதன்’தான் வெளிப்படுகிறார். இப்படி சமூக அக்கறையில் ஆர்த்தியை கவனிக்க மறக்க, சந்தர்ப்பத்தை சாதகப்’படுத்தி’, ஆர்த்தியை வசப்’படுத்தி’ ராகவை பழிவாங்குகிறார் கோபால். இது தெரியாமல், ராகவ் முதற்பணியாக கோபாலின் கல்லூரி எம்.எல்.ஏ’வின் ஊழல் பணத்தில் கட்டப்பட்டது என்று எழுதுகிறார். பகை முற்றுகிறது. தன் எழுத்தின் மூலம் எம்.எல்.ஏ வை ராஜினாமா செய்ய வைக்கிறார் ராகவ். எம்.எல்.ஏ பதவி காலியாகிறது. ஆர்த்தியின் அப்பா அரசியல்வாதி, அவரால் முடியாததால் ஆர்த்தியை எம்.எல்.ஏ’வாக்க முயற்சிக்கிறார், ஆர்த்தி அரசியலை வெறுக்கிறார், இப்படி ஒரு மொக்கை ட்விஸ்ட் வைத்து, ஆர்த்தியை கல்யாணம் பண்ணிக்க போகிறவர் தான் எம்.எல்.ஏ எனச் சொல்கிறார் பகத். இப்படிப் பட்ட சூழ்நிலையில், ராகவை கோபால் சந்திக்கிறார். ராகவின் பெருந்தன்மையை புரிந்துகொள்கிறார், ஓவர் நைட் கனவில் நல்லவனாகி, ஆர்த்தியை ராகவோடு சேர்த்து வைக்க ஆர்த்திக்கு துரோகம் பண்ணுகிறார். “உங்களை மலை போல நம்பினேனே கோபால்.... இப்படி எனக்கு துரோகம் பண்ணிட்டிங்களே கோபால் கோபால்....” என்று சொல்லி கோபாலை விட்டு விலகி ராகவை மணந்து கொள்கிறார் ஆர்த்தி. எம்.எல்.ஏ ஆகிறார் ராகவ். கதை முடிகிறது.


நம் தேசத்தில் கல்வி வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது, ஊழலைக் கல்வியில் புதைக்கிறார்கள், “படிக்காதவர்கள் கூட கல்வித்தந்தை ஆகிவிடலாம்” என்பதையெல்லாம் சொல்லியிருக்கிறார், பாராட்டுக்கள். சமீபத்திய சமூக நிழல்வுகளான லஞ்சம், ஊழல் போன்றவைகளின் வழி இக்கதையை நகர்த்தியிருக்கிறார் பகத். இன்னும் கொஞ்ச நாள் கழித்து புத்தகம் வந்திருந்தால், இப்போதைய ட்ரெண்ட்’டான உண்ணாவிரதத்தையும் சேர்த்திருப்பார். இருந்தும், தான் நினைத்தபடி க்ளைமாக்ஸ்’ஐ முடிக்க நிறையவே இழுத்திருக்கிறார். ரெண்டு பாட்டு, கொஞ்சம் பிட்டு, கொஞ்சம் ஃபைட் சேர்த்தால் சூப்பர் மசாலா ஹிந்திப் படம் ரெடி.


Revolution 2020 - பாடமல்ல படம்!


7 comments:

Pulavar Tharumi said...

அருமையான விமர்ச்சனம்! தினத்தந்தி மேட்டரையும் ஜூனியர் விகடன் மேட்டரையும் சேர்த்து புத்தகமாக எழுதிட்டாரு போல :)

ரமி said...

ஒரு குப்பை நாவல்.

ஆபத்தான ஆர்த்தி, அதர பழசான ராகவ் கெரக்டர், கேடு கெட்ட கிளைமேக்ஸ்.

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

amas said...

Head rotating fast after reading your review:)Good I don't have to buy the book.Well written!
amas32

நடராஜன் said...

அட சினிமாவுக்கு எழுதிய விமர்சனம் போலவே இருக்கே! :)

ILLUMINATI said...

Good review dude. Chetan Bhagat is a crap writer. All his stories read like a bad B grade bollywood film. Try to read some good authors. :)

ரெவெரி said...

அருமையான விமர்ச்சனம்...இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..